Friday, November 16, 2007

கார்த்திக் குணமடைந்து வருகிறான்

அன்பான வலைப் பதிவு நண்பர்களே!!!!

மீண்டும் மீண்டும் கூட்டுப் பிரார்த்தனையின் வலிமையை உணர்கிறேன்.

சில தினங்களுக்கு முன் கார்த்திக் என்ற இளைஞன் மருத்துவ ஆலோசனையின்றி அபாயகரமான மாத்திரைகளை உட்கொண்டதால் சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளானதையும் அவனுக்காக பிரார்த்திக்குமாறும் கேட்டிருந்தேன்.

அவன் தற்சமயம் மருந்துகளின் விளைவால் ஏற்பட்ட உபாதைகளிலிருந்து மீண்டு சிறுநீரகம் செயல்படத் தொடங்கி விட்டதாகவும் நன்கு குணமடைந்து வருவதாகவும் நண்பர் மூலம் அறிந்தேன்.

அவானுக்காக பிரார்த்தித்த அனைத்து அன்பான இதயங்களுக்கும் நன்றி.
நன்றி.............நன்றி.

குறிப்பு:

பதிவர் அனுராதா அம்மாவுக்காகவும் பதிவிட்டிருந்தேன்.அவர்களும் குணமடைந்து வருவதாக
நன்றி பதிவிட்டிருந்தார்.

நண்பர்கள், உறவினர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ய விரும்பும் பதிவர்களுக்கு இந்த 'பிரார்த்தனை நேரம்' பதிவு திறந்து விடப் படுகிறது.
விருப்பப்படும் நண்பர்கள் மெயில் முகவரி தந்தால் இணைப்பு கொடுக்கப் படும்.

1 comment:

Anonymous said...

great to hear this.thank god